மாவட்ட விளையாட்டு போட்டியில் ஐ.வி.எல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

அரூர், நவ.6: தமிழ் நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தர்மபுரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட இருமத்தூர் ஐ.வி.எல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டியில், 62பேர் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 35  மாணவ, மாணவிகள் 2ம் இடத்தையும், 16 மாணவ, மாணவிகள் 3ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.முதலிடம் பிடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய கேரம் விளையாட்டு     போட்டியில், அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள்  அனைவருக்கும் மாவட்ட விளையாட்டு அலுவலர் பரிசுத்தொகையை  வழங்கினார். மணிப்பூரில் நடைபெற்ற ஜீடோ போட்டியில், ஹேமந்த் என்ற மாணவன் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். ெவற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும்  பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் முனியப்பன், சுகன், அர்ச்சுனன், மீனாட்சி ஆகியோரை பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் டிரஸ்ட்

உறுப்பினர்கள் முதல்வர் பழனி, துணைமுதல்வர் ரகுபதி ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: