தர்மபுரி, நவ.6: பழைய தர்மபுரியில் திறந்த வெளியில் காணப்படும் பொது கிணற்றுக்கு இரும்பு கேட் அமைக்க ேவண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அருகே பழைய தர்மபுரி சின்னதோப்பு பகுதியில், பொதுமக்களின் தேவைக்காக ஒரு பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட வறட்சி காரணமாக, கிணறு வறண்டு போனது. இதையடுத்து பொதுமக்களும் கிணற்றை பயன்படுத்தாமல், தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை கிணற்றுக்குள் கொட்டி வந்தனர்.