தர்மபுரி, நவ.5: தர்மபுரி அருகே வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உறவினர்கள் மனு கொடுத்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த வேடியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் அரூர் அருகே போடிநாயக்கன்பட்டியில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த மாதம் 26ம் தேதி எனது மகன் ஸ்ரீதர்(20) பெத்தூரில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு, இரவு 7 மணி அளவில் பெத்தூருக்கும், போடிநாயக்கன்பட்டிக்கும் இடையே உள்ள சாலையோரம் இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அங்கு வந்தது.