கோவில்பட்டியில் 2 பவுன் திருடிய பெண் கைது

கோவில்பட்டி, நவ. 5: கோவில்பட்டி வள்ளுவர்நகர் 1வது தெருவை சேர்ந்த கணேசன் மனைவி சரஸ்வதி (35). இவர். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் கதவை பூட்டி சாவியை கதவின் மறைவில் வைத்து விட்டு, மதுரையில் உள்ள கோயிலுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட பக்கத்து வீட்டில் வசித்து வரும் சந்தனகுமார் மனைவி கருப்பாயம்மாள் (34), சாவியை எடுத்து கதவை திறந்து, சரஸ்வதி வீட்டிற்குள் புகுந்து கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட 2 பவுன் தங்க நகையை திருடினார். பின்னர் வீட்டை பூட்டி சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு கருப்பாயம்மாள் சென்றுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய சரஸ்வதி, வீட்டில் இருந்த 2 பவுன் நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். விசாரணையில், சரஸ்வதி வீட்டில் நகைகளை திருடியது கருப்பாயம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். 

Related Stories: