பென்னாகரம், நவ.1: பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்து செல்கின்றனர். கூட்டுறவு வங்கி முன்பு, மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது.