கஞ்சா விற்றவர் கைது

தர்மபுரி, நவ.1: அதியமான்கோட்டை முக்கல்நாயக்கன்பட்டியில், சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து, கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: