முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா

அரூர், அக்.31: அரூர் ஒன்றிய முக்குலத்தோர் புலிப்படை சார்பில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழாவும், 57வது குருபூஜையும் அரூர் நான்குரோடில் நடந்தது. இதனையொட்டி முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலாளர் மருதுபிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: