அரூர், அக்.31: அரூர் பேரூராட்சி 10வது வார்டில், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரூர் பேரூராட்சி 10வது வார்டுக்குட்பட்ட திருவிக நகர், கோவிந்தசாமி நகரில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.