இலவச மனை பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர்கள் மனு

தர்மபுரி, அக்.25: தர்மபுரி மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு, இலவச மனைபட்டா கேட்டு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நேற்று  நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மனுகொடுக்கப்பட்டது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது:நல்லம்பள்ளி வட்டம், மிட்டாரெட்டி அள்ளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்கள் வீட்டுமனை இல்லாமல் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். எனவே, இவர்களுக்கு கிராமத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 92 மனுக்களை நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, ஒன்றிய செயலாளர் எல்லப்பன், மார்க்சிஸ்ஸ் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் குப்புசாமி மற்றும் அந்தோணி, ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: