பென்னாகரம் அருகே மூதாட்டி மாயம்

தர்மபுரி, அக்.23: பென்னாகரம் பெத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அக்குமாரன். இவரது மனைவி அங்கம்மாள் (85). இவர், கடந்த 17ம் தேதி காலை வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் அங்கம்மாளை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தினர், பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: