இந்திய குடியரசு கட்சி ஆலோசனை கூட்டம்

அரூர், அக்.18: இந்திய குடியரசு கட்சியின், தர்மபுரி மாவட்ட ஆலோசனை குழு கூட்டம், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சிவநாதன் தலைமை வகித்தார். மாநில தலைவர் கரியமால் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டம் காரணை பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில், காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துதல், நாங்குதேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது, தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிலத்திற்கு பட்டா வழங்க, தமிழக அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ராமு, செயல் தலைவர் சந்திரசேகர், அமைப்பு செயலாளர் சதாசிவம், தீர்த்தகிரி, கந்தப்பன், கொள்கை பரப்பு செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: