கரூரில் ஏடிஎம் கண்ணாடி கதவு உடைத்த வாலிபர் கைது

கரூர், அக். 17: கரூர் பஜாரில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மின் கண்ணாடி கதவு நேற்று முன் தினம் உடைக்கப்பட்டது. இது குறித்து வங்கி மேலாளர் தமிழரசு பசுபதிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த வடிவேல்(32) என்பவரை கைது செய்தனர். அவர் போதையில் கண்ணாடி கதவை உடைத்து விட்டதாக போலீசாரிடம் கூறி உள்ளார்.

Related Stories: