ராயனூர் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் பின்புறம் மந்தகதியில் சாக்கடை வடிகால் பணி

கரூர், அக். 16: கரூர் இலங்கை தமிழர்கள் முகாம் பின்புறம் நடைபெற்று வரும் சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் ராயனு£ரில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த பகுதியின் அருகே எம்ஜிஆர் நகர் பகுதியில் இருந்து தாந்தோணிமலை சவுரி முடித்தெரு போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் மாற்று வழியில் சென்று வருகின்றனர். இந்த பணி மெத்தனமாகவே நடைபெற்று வருவதால் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் நடைபெற்று வரும் சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, எளிதான போக்குவரத்து நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: