கரூர், அக். 16: கரூர் மாவட்டம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சி தாந்தோணிமலை 47வது வார்டு பாரதியார் தெரு மற்றும் வாஞ்சிநாதன் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் இது குறித்து கலெக்டர் கூறுகையில்,கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணித்திடவும் ஊரக பகுதிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் குறுவட்ட அளவிலும், வார்டு வாரியாகவும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறதா என்பது குறித்தும், டெங்கு வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.டெங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை மூடி வைத்து தூய்மையாக பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்கின்றனர். நீர்த்தொட்டிகளில் குளோரின் பவுடர் இருந்தாலோ, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கியிருந்தாலோ அது குறித்து போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.