தர்மபுரி, அக்.15: தர்மபுரி- பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மற்றும் விஜய் மில்லினம் சிபிஎஸ்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மனவள ஆர்வமூட்டும் சிறப்பு சொற்பொழிவு பள்ளி அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குநர்கள் ப்ரேம், ஸ்நேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டீன் ஜெய்ஹரிஷ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கல்வியாளரும் பேச்சாளருமான டாக்டர் ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மனவள ஆர்வமூட்டுதல் குறித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். இதில், துறைத்தலைவர்கள் சந்திரசேகரன், முதல்வர்கள் மைதிலி, ஜான் லாரன்ஸ், துணை முதல்வர்கள் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவி மோனிகா நன்றி கூறினார்.