கரூரில் மாற்று திறனாளிகள் குறை தீர் நாள் கூட்டம் நாளை நடக்கிறது

கரூர், அக். 15: கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில் அக்டோபர் 16ம்தேதி (நாளை) காலை 9.30மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம்.இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: