திருச்செந்தூர், அக். 15: திருச்செந்தூர் அருகே கல்வேலி மீது பைக் மோதியதில் படுகாயமடைந்த தனியார் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆறுமுகநேரி, பேயன்விளையைச் சேர்ந்த கோபால் மகன் அரசகுமார் (32). கல்லாம்மொழியில் தனியார் மின் உற்பத்தி ஆலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரும், இவரது நண்பரும் ஆறுமுகநேரி தனியார் வங்கி ஊழியரான சுடலைராஜா (22) என்பவரும் மெஞ்ஞானபுரத்தில் உள்ள மற்றொரு நண்பரான விஸ்வநாதன் என்பவரை பார்க்க நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றனர். பைக்கை அரசகுமார் ஓட்டினார்.