கரூர், அக்.10: சேதம்அடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும்என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகே உள்ள மாயனூரில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தபூங்காவுக்கு மாயனூர் காவிரி கதவணைக்கு வரும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திருச்சி மெயின்ரோட்டில் இருந்து வரும்வழியில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து வரும்வழியில் பூங்கா அருகே வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கைப்பிடி கம்பிகள் வளைந்து காணப்படுகிறது.மேலும் பாலமும் சேதம்அடைந்துள்ளது. தற்போது அதிக அளவில் இந்தசிறிய பாலத்தை தொட்டுக்கொண்டுநீர் செல்கிறது. அதிகம் பேர் சென்று வரும்பாலம் என்பதால் இதனை தண்ணீர் வருவதற்கு முன்னரே சீரமைத்திருக்க வேண்டும். சுற்றுலாத்தலமாக இருப்பதாலும் அதிகம்பேர் வந்துசெல்லும் பாலம்என்பதாலும் பாலத்தை வலுவாக்கி கைப்பிடி கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.