கோவில்பட்டி, அக்.2 கோவில்பட்டி, கயத்தாறு தாலுகா கிராம குளங்களில் விதிகளை மீறி சரள் மண் எடுப்பதை நிறுத்தகோரி காங்கிரசார் காதுகளில் பஞ்சுகளை வைத்து அடைத்து ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் முதல் கோவில்பட்டி வரை நடைபெறும் ரயில்வே இருப்புபாதை பணிக்காக கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகா கிராமங்களில் உள்ள குளங்களில் விதிமுறைகளை மீறி சரள் மண் எடுத்து செல்வதாகவும், தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சரள் மண் அள்ள தடை விதித்துள்ள நிலையில், கோவில்பட்டி, கயத்தாறு தாலுகாவில் சரள்மண் ரயில்வே பணிகளுக்கு குளங்களில் இருந்து கொண்டு செல்வதை தடுக்கவும், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தாறு தாலுகாவில் சரள்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.