விஷம் குடித்த டிரைவர் சாவு

நாசரேத், அக்.2: நாசரேத் சாமுஞானவிலாஸ் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜன்(50). கார் டிரைவர். இவரது மனைவி நேசராணி(49). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 29ம்தேதி பவுல்ராஜன் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: