வேன் டிரைவருடன் இளம்பெண் ஓட்டம்போலீசில் புகார்

கிருஷ்ணகிரி, அக்.1:  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிஅருகே உள்ள கூலியம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (40). கூலி தொழிலாளியான இவரது மனைவிஉஷாராணி (35). இவர் கடந்த 25ம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்துசென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சண்முகம்தனது மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சூளகிரி போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், உஷாராணி,அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் வெங்கடேஷ்(40) என்பவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.இதையடுஉஷாராணி மற்றும் வெங்கடேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: