குளித்தலை, செப். 30: குளித்தலை அடுத்த வாலாந்தூர் சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் கேட்டு இன்று நடக்கவிருந்த போராட்டம் அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாலாந்தூர் கிராமத்தில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் இக்கிராமத்தில் இறந்தவர்களை 5 கிலோமீட்டர் சுற்றி எடுத்து சென்று குளித்தலை நகராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் அடக்கம் செய்யும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால் வாலாந்தூர் சுடுகாட்டு பாதியை சரி செய்ய வேண்டும். மயான எரி மேடை அமைக்க வேண்டும். மயான கொட்டகை அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் வாலாந்தூர் கிராம பொதுமக்கள் சார்பில் இன்று(திங்கட்கிழமை) காலை வாலாந்தூர் சுடுகாட்டில் ஒப்பாரி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.