பென்னாகரம், செப்.26: பென்னாகரம் பகுதியில், குற்றச்சம்பவங்களை தடுக்க 50 சிசிடிவி பொருத்தப்பட்டது. இதை டிஎஸ்பி தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 50 கேமரா வைத்து தீவிர கண்காணிப்பு பணி பென்னாகரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேகலா தொடங்கிவைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விதிமுறை மீறும் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் குற்றசம்பவங்களில் ஈடும் நபர்களை கண்காணிக்க பொது மக்கள் ஒத்துழைப்போடு ₹15 லட்சம் மதிப்பில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பென்னாகரம் 4 ரோடு பகுதி, ஒகேனக்கல் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் 8 கேமராக்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட ஐபி கேமராக்கள் ஆகும்.