கரூர், செப். 25: கரூர் வெங்கமேடு மேம்பால துவக்கத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் வெங்கமேடு இடையே ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கரூரில் இருந்து மண்மங்கலம், நெரூர், சோமூர், சேலம், வேலூர், வெங்கமேடு, வாங்கப்பாளையம் போனற் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.இதே போல் இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. இது மட்டுமின்றி மேம்பால துவக்கத்தில் வலதுபுறம் ரயில் நிலையம், பசுபதிபாளையம் போன்ற பகுதிகளுக்கும், இடதுபுறம் செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம் போன்ற டெக்ஸ்டைல்ஸ் நிறைந்த பகுதிகளுககும் வாகனங்கள் பிரிந்து செல்கிறது.