தர்மபுரி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

தர்மபுரி, செப்.20:தர்மபுரி அடுத்த இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(43). இவருடைய  நண்பர் சின்னவன் (45). கூலி தொழிலாளிகளான இருவரும், நேற்று முன்தினம் மாலை இருமத்தூரில்  இருந்து டூவீலரில் திப்பம்பட்டி கூட்ரோடு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி, நாகராஜின் டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து படுகாயமடைந்த சின்னவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து திப்பம்பட்டி கூட்ரோடு சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி இது போன்று விபத்துக்கள் நடக்கிறது எனக்கூறி, அப்பகுதியை சேர்ந்த மக்கள் 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தர்மபுரி போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: