பாலக்கோடு, செப். 19: காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.காரிமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஜிட்டாண்ட அள்ளி மற்றும் அனுமந்தபுரம் அகிய இடங்களில் நடைபெற்றது. முகாமிற்கு மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரி பிரசாத் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கவும், தமிழக அரசுத்துறைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முழு ஒதுக்கீடு செய்யவும், மத்திய அரசின் இந்தி திணிப்பை தடுக்கவும் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்படி, இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது என்றார்.