தர்மபுரி, செப்.19: தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், குமாரசாமிபேட்டை பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் நேற்று குமாரசாமிபேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், அப்பகுதி மக்கள் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் ஓடுவதால் சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி, நெடுஞ்சாலைதுறை, குடிநீர் வடிகால்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்த எம்பி செந்தில்குமார், பொதுமக்கள் புகார் குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.