வாய்க்கால்மேடு புது கோர்ட் தெருவில் பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் குளித்தலை நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

குளித்தலை, செப். 11: கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி 9வது வார்டு புது கோர்ட் தெரு வாய்க்கால் மேடு பகுதி பொதுமக்கள் சார்பில் பொது கழிப்பிட வசதி கேட்டு குளித்தலை நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது:குளித்தலை நகராட்சி 9வது வார்டு பகுதியில் வாய்க்கால் மேடு புது கோர்ட் தெரு பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இப்பகுதியில் அனைவரும் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் அவலம் உள்ளது, மேலும் மழை காலங்களில் ஆண்கள் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு இடமில்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் பல்வேறு தொற்று வியாதிகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.எனவே இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி வாய்க்கால் மேடு பகுதியில் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள இடத்தை பார்வையிட்டு புதிதாக கழிப்பிடம் கட்ட வசதியான இடத்தை தேர்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories: