காரிமங்கலம், ஆக.14: காரிமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தும், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் ஏற்றி விநியோகிக்காததால், கடந்த ஓராண்டாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய நிதியில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுவது இல்லை. பொதுமக்களுக்கு சரிவரி குடிநீர் விநியோகம் செய்வதில்லை.