மூகாம்பிகை பாலிடெக்னிக்கில் மழை நீர் சேகரிப்பு கருத்தரங்கு

பாலக்கோடு, ஜூலை 23:  பாலக்கோடு அருகே மாதம்பட்டியில் செயல்பட்டு வரும்,  மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம், கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் லட்சுமி சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவர் கோவிந்தராஜ்ஜி தலைமை வகித்து பேசினார். பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி மழைநீர் சேகரிப்பு குறித்தும், வழிமுறைகள் குறித்தும் பேசினார். லட்சுமி சரஸ்வதி அறக்கட்டளையின் செயலாளர் மதன்மோகன், கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்கள், மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தினர் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு பற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கல்லூரி முதல்வர் சிவகுமார் நன்றி கூறினார். இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், அனைத்து துறை தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: