பென்னாகரம், ஜூன் 26: பென்னாகரம் அருகே கூடுதல் பஸ்களை இயக்கக்கோரி மாணவர்கள் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரியில் இருந்து பென்னாகரம் அடுத்த சின்னமலைக்கு தினமும் காலை நேரத்தில் 5சி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பெரும்பாலை, சின்னம்பள்ளி, அரக்காசனஅள்ளி வழியாக சின்னமலைக்கு செல்லும். அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தர்மபுரியில் இருந்து சின்னமலைக்கு இயக்கப்படும் பஸ் மீண்டும் அங்கிருந்து 7.30 முணிக்கு தர்மபுரிக்கு இயக்கப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் கூலி வேலை, அலுவலக பணி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தர்மபுரிக்கு வரும் அனைவரும் இந்த பஸ்சில் தான் பயணிப்பர். இதனால் பஸ்களில் தினமும் காலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்படும். எனவே இப்பகுதியில் காலை நேரத்தில் கூடுதலாக ஒரு பேருந்தை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.