காரிமங்கலம், ஜூன் 26: காரிமங்கலம் சந்தையில், மாடு, ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தை பிரசித்தம். இந்த சந்தைக்கு காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில், மாரியம்மன் திருவிழா நடைபெற உள்ளதால், நேற்று கூடிய சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 750 மாடுகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு மாடும் ₹15 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ₹63 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.