காரிமங்கலம், ஜூன் 26: காரிமங்கலம் சந்தை திடலில், அபாயகரமான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சந்தை திடலில், வாரந்தோறும் சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு காரிமங்கலம் மட்டுமின்றி தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், சந்தையின் நடுவே அமைந்துள்ள ஒரு சாய்ந்த மின் கம்பத்தில் இருந்து கம்பிகள் மிகவும் தாழ்வாக சாலையைக் கடந்து எதிரே செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.