இண்டமங்கலத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தர்மபுரி, ஜூன் 25: இண்டமங்கலத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்  நாளை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கை: பெரியாம்பட்டி அருகே இண்டமங்கலத்தில் நாளை (26ம் தேதி)காலை 10 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். எனவே, இண்டமங்கலம் கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: