கடத்தூர் பகுதியில் 10 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல்

கடத்தூர், ஜூன் 21: கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, ஆறுமுகம் ஆகியோர் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் கடத்தூர் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்களில் நேற்று ஆய்வு நடத்தினர். இதில், விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 17 கடைகளுக்கு, ₹3700 அபராதம் விதித்தனர். மேலும், 10 கிலோ கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: