தேக்கல்நாயக்கன்பட்டியில் நிழற்கூடம் அமைக்க மக்கள் வேண்டுகோள்

கடத்தூர், ஜூன் 21: கடத்தூர் அருகே தேக்கல்நாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர் தர்மபுரி, அரூரை இணைக்கும் முக்கிய சாலைகள் இணைப்பு சாலையாக உள்ளது. கடத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சேந்த மக்கள் போக்குவரத்திற்காக, தர்மபுரி- சேலம் சாலைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் நிழற்கூட வசதி இல்லாததால், பயணிகள் மரத்தடி மற்றும் கடைகளில் பல மணி ேநரம் காத்திருக்க ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் நிழற்கூடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: