கடத்தூர், ஜூன் 21: கடத்தூர் அருகே தேக்கல்நாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர் தர்மபுரி, அரூரை இணைக்கும் முக்கிய சாலைகள் இணைப்பு சாலையாக உள்ளது. கடத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சேந்த மக்கள் போக்குவரத்திற்காக, தர்மபுரி- சேலம் சாலைக்கு வருகின்றனர்.