தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசின் கவனக் குறைவாலும், உள்ளாட்சித் துறை அமைச்சரின் அலட்சியத்தாலும், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அன்றாடம் பெண்களும், ஆண்களும், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் ஆகியோர் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலைந்து பரிதவிப்பதும், தங்கும் விடுதிகள் மூடப்படுவதும், மக்கள் வீடுகளை காலி செய்வதும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன.