தர்மபுரி, ஜூன் 21: மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டம் அமலாக்கத்துறை சார்பில், 7வது பொருளாதார கணக்கெடுப்பு, இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் செயல்படும் 3 லட்சம் பொது இ-சேவை மையங்கள் மூலம் நடைபெற உள்ளது.
இம்முறை, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போன் மூலம் பொருளாதார கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யேக செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.