தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி அருகே முத்துக்கவுண்டன் கொட்டாயில், சம்பங்கி பூ கிழங்கு தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, செவ்வந்தி, பட்டன்ரோஸ், அரளி, குண்டு மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் பயிரிடப்படுகின்றன. கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு பயன்படுத்தும் மாலைகளில் முக்கிய இடம் பெறுவதால், சம்பங்கி பூவிற்கு எப்போதும் கிராக்கி அதிகமாக இருக்கும்.