கரூர்,ஜூன் 21: கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி 2ம்நாளில் கலெக்டர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் 15பேருக்கு ரேஷன்கார்டு, 3 பேருக்கு மழைத்தூவான் கருவி, 2பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கினார்.
வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, நிலஅளவை உதவி இயக்குனர் பழனிக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.