அரூர், ஜூன் 19: அரூர் பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழைகள் பொய்தததால் மாநிலம் முழுவதும் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்கு பல கிலோ மீட்டர் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில், விவசாயிகள் தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3ஆண்டுகளாக பருமழை பொய்த்து ேபானதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தென்னை மரங்கள் அனைத்தும் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. சில விவசாயிகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டி, குறைந்த விலைக்கு செங்கல் சூளைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும்
அவல நிலை ஏற்பட்டுள்ளது.