தர்மபுரி, ஜூன் 19: தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளியில் 2வது கட்டமாக ஜமாபந்தி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கடந்த 13ம் தேதி முதற்கட்டமாக ஜமாபந்தி நடந்தது. 2வது கட்டமாக நேற்று தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், பழனியம்மாள், மாரிமுத்து, வினோதா, துணை தாசில்தார் வள்ளி, வருவாய் ஆய்வாளர்கள் சுகுமார், இளையராஜா மற்றும் விஏஓக்கள் தாமோதரன், சங்கர், பாலமுரளி, குமார், நாராயணன், சரவணன், பார்த்திபன், ெவங்கடேசன், சாக்கப்பன், பாஸ்கர், முருகன் உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.இதே போல் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் சப் கலெக்டர் சிவனருள் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் தாசில்தார் இளஞ்செழியன், கலைசெல்வி, சுப்ரமணி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.