அரூர், ஜூன் 18: அரூர் சுற்று வட்டார பகுதியில், தாழ்வாக பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.அரூர் நகர், ராயப்பன்கொட்டாய், எல்லப்புடையாம்பட்டி, ஈட்டியம்பட்டி, பாளையம், தீர்த்தமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சிறிய ரக விமானம் ஒன்று, நேற்று காலை 7.15 மணி முதல் 9 மணி வரை 5க்கும் மேற்பட்ட முறை வானில் வட்டமிட்டு பறந்து சென்றது. மிகவும் தாழ்வான நிலையில் இந்த விமானம் பறந்ததால், பொதுமக்கள் இடையே பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டது. இதே போல், கடந்த வாரம் மொரப்பூர், மருதிப்பட்டி சுற்று வட்டார பகுதியில், 10க்கும் மேற்பட்ட தடவை விமானம் பறந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.