தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மாவட்டத்தில் 450 தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்கில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்தனர். அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.ேமற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், 2 பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, நேற்று தர்மபுரி மாவட்டத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்கில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று(18ம் தேதி) காலை 6 மணிவரை இந்த புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். உள்நோயாளிகளுக்கு மருத்துவமனைக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டது.