அரூர், ஜூன் 14: அரூர் அருகே சித்தேரி மலை ஊராட்சியில் 63 குக்கிராமங்கள் உள்ளது. இப்பகுதி விவசாயிகள், வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக உரிமம் பெற்று நாட்டுத் துப்பாக்கி வைத்துள்ளனர். இதனிடையே, உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரித்திருப்பதாக, மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து, மாவட்ட எஸ்பி ராஜன் உத்தரவின் பேரில், அரூர் டிஎஸ்பி செல்லப்பாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சித்தேரி மலை கிராமங்களில் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.