‘ஹெல்மெட்’ விற்பனை ஜோர்தர்மபுரி, ஜூன் 14: ஜூன் 1ம் தேதி முதல் தர்மபுரி நகரில் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், ஹெல்மெட் அணிய வேண்டும் என தர்மபுரி டிஎஸ்பி ராஜ்குமார் அறிவுறுத்தியிருந்தார். இதையொட்டி கடந்த 3ம் தேதி தர்மபுரி நகரில், இருசக்கர வாகன ஓட்டிகளில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்த போலீசார் ஹெல்மெட் அணிவோம் என உறுதி மொழி எழுதி வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து தினமும் போலீசார் வாகன தணிக்கை செய்து, ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.