தர்மபுரி, ஜூன் 14: தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும், சமீபகாலமாக தெருநாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து விட்டது. பிராணிகள் வதை தடுப்புச்சட்டத்தால், தெருநாய்களை கொல்வதை கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகங்கள் கைவிட்டு விட்டன. இதன் காரணமாக தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து விட்டது. இதை தடுக்க, தெருநாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி நகராட்சியில், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி கடந்த மாதம் முதல் தொடங்கியுள்ளது.