தர்மபுரி, ஜூன் 12: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வீட்டிலிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த, கணவரின் தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த கமலகேசன் மனைவி புவனேஸ்வரி (29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன் கமலகேசன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். கமலகேசன் பெயரில் சொத்துள்ளது. அந்த சொத்தை புவனேஸ்வரி அனுபவித்து வந்தார். இந்நிலையில் இந்த சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில், கமலகேசன் தம்பி பிரபாகர் (41) ஈடுபட்டார். இதனால் புவனேஸ்வரிக்கும், பிரபாகருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி சண்டையும் நடந்துள்ளது.