பைக் மோதி மாணவி காயம்

நாசரேத், ஜூன் 12: நாசரேத்தில் பைக் மோதியதில் மாணவி காயமடைந்தார். ஆறுமுகநேரி கீழசண்முகபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகள் வான்மதி (19). நாசரேத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2ம் ஆண்டு படித்து வரும் இவர், சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாலையில் நடந்துசென்றபோது  பின்னால் முதலைமொழியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சுடலைகுட்டி (18) என்பவர் ஓட்டிவந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வான்மதி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.விபத்து  குறித்து நாசரேத் எஸ்ஐ செல்வின் ஐசக் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: