கரூர், ஜூன் 11: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே நிழற்குடையில் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து திருச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளான தாந்தோணிமலை, வெள்ளியணை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் இந்த பகுதியில் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். பஸ் நிறுத்தம் அருகே திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையும் உள்ளது. ஆனால் இந்த நிழற்குடை சரிவர பராமரிக்காத காரணத்தினால், பயணிகள் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை. இந்த பகுதியை சுற்றிலும் இருட்டாக காணப்படுவதால் இரவு நேரங்களில் பயணிகள் உள்ளே செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.